​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூரில் ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு... மணல் லாரி கண்ணாடி அடித்து உடைப்பு

Published : Aug 26, 2024 8:01 AM

வேலூரில் ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு... மணல் லாரி கண்ணாடி அடித்து உடைப்பு

Aug 26, 2024 8:01 AM

வேலூர் மாவட்டம் டி.கே.புரம் பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற யுவராஜ் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மணல் கொள்ளையால்தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி, மணல் லாரி ஒன்றின் கண்ணாடியை அப்பகுதி மக்கள் அடித்து உடைத்தனர்.

பாலாற்றில் ஆங்காங்கே அளவுக்கதிமாக மணல் தோண்டப்பட்டு, அதனால் ஏற்பட்ட ஆழமான பள்ளங்களால் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்தனர்.