​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல்

Published : Aug 25, 2024 7:31 PM

அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல்

Aug 25, 2024 7:31 PM

கடலூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நொச்சிக்காடு பகுதியில் சகோதரர்களான ராஜேஷ், ரமேஷ் ஆகியோர் பட்டாசு விற்பனைக்கு லைசன்ஸ் பெற்று, அனுமதி இன்றி தங்களது குடோனில் பட்டாசுகள் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?, என்பது குறித்து அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.