​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகையில் ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி விபத்து... தம்பதியை மீட்ட தீயணைப்புத் துறை

Published : Aug 24, 2024 12:08 PM

உதகையில் ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி விபத்து... தம்பதியை மீட்ட தீயணைப்புத் துறை

Aug 24, 2024 12:08 PM

உதகை அருகே புதுமந்து காவல்நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரிக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்-நிர்மலா தம்பதி தங்களது நிலத்தில் விளைந்த மலைப் பூண்டுகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் விற்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை திரும்பியபோது அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மினி லாரியை ஓட்டி வந்த செல்வராஜ் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.