​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரில் உயிரிழந்த பன்றிமீது விஷம்ஊற்றி புலிகளை கொன்ற தோட்டப்பணியாளர் 3 பேர் கைது

Published : Aug 24, 2024 11:53 AM

நீலகிரில் உயிரிழந்த பன்றிமீது விஷம்ஊற்றி புலிகளை கொன்ற தோட்டப்பணியாளர் 3 பேர் கைது

Aug 24, 2024 11:53 AM

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதற்காடு, சோலாடி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி தாய் புலி மற்றும் சுமார் 1 வயது மதிக்கத்தக்க ஆண் புலிக்குட்டி உயிரிழந்து கிடந்தன.

வனத்துறையினர் அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் அருகில் பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனையில், பன்றி மற்றும் புலிகளின் குடல் பகுதியில் விஷம் இருந்தது தெரியவந்ததை அடுத்து தனிப்படை போலீசார் அத்தோட்டத்தில் பணியாற்றிய மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில், உயிரிழந்த பன்றியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதன் பின்னர் அதனை அழித்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புலிகளின் தோல், பற்கள் மற்றும் நகங்களுக்காக, உயிரிழந்த பன்றியின் மீது விஷத்தை ஊற்றி அதை புலிகள் உண்ணும் வகையில் போட்டதாக வாக்குமூலம் அளித்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த சூரியநாத் பராக், அமன் கோயாலா, சுரேஷ் நண்வார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.