​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூரில் தாயை இழந்த பசுங்கன்றுக்கு பால் கொடுத்த நாய்

Published : Aug 24, 2024 8:58 AM

திருவள்ளூரில் தாயை இழந்த பசுங்கன்றுக்கு பால் கொடுத்த நாய்

Aug 24, 2024 8:58 AM

திருவள்ளூர் மாவட்டம் சிறுகளத்தூரில் தாயை இழந்த பசுவின் கன்றுக்கு நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஹரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசு கன்று ஈன்ற மறுநாளில் உயிரிழந்தது.

அதே நாளில் அவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய் குட்டி போடவே, தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பது போலவே தாயை இழந்த கன்றுக்கும் நாய் பால் கொடுத்தது.