​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமைதியை வலியுறுத்தும் இந்தியா... உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

Published : Aug 24, 2024 8:51 AM

அமைதியை வலியுறுத்தும் இந்தியா... உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

Aug 24, 2024 8:51 AM

உக்ரைன் அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அமைதியை வலியுறுத்திய நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் மதிப்பில் கூடுதல் ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

ட்ரோன் எதிர்ப்பு மற்றும் கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் வீரர்களுக்கான ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். இந்த ஆயுத உதவியை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.