​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பிய ரயில்வே எஸ்.பி ஈஸ்வரன்..!

Published : Aug 23, 2024 3:03 PM

ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பிய ரயில்வே எஸ்.பி ஈஸ்வரன்..!

Aug 23, 2024 3:03 PM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த 30க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை பிடித்த ரயில்வே போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

திருவள்ளூர்- சென்னை புறநகர் ரயிலில் வந்த மாணவர்கள், தங்களது குழுவின் கெத்தை காட்டுவதற்காக பெயர் பலகையின் மீது ஏறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீண்டும் இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என மாணவர்களை தமிழக ரயில்வே காவல் எஸ்.பி ஈஸ்வரன் எச்சரித்தார்.