​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புழல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீட்டின் அருகே பேட்டரி இணைக்கப்பட்ட பெட்ரோல் கேன்கள் போலீசார் பறிமுதல்

Published : Aug 23, 2024 11:55 AM

புழல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீட்டின் அருகே பேட்டரி இணைக்கப்பட்ட பெட்ரோல் கேன்கள் போலீசார் பறிமுதல்

Aug 23, 2024 11:55 AM

சென்னை, செங்குன்றம் அருகே புள்ளிலைன் பகுதியில், திமுக புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வீட்டிற்கு அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மேல் வைக்கப்பட்டிருந்த, பேட்டரி இணைக்கப்பட்ட பெட்ரோல் நிரப்பிய 3 கேன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், பெட்ரோல் கேன்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டு வீசுவதற்காக தயாரிக்கப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும், அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.