​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஒத்துழைக்கும்... இந்தியா- போலந்து பிரதமர்கள் இணைந்து கூட்டறிக்கை

Published : Aug 23, 2024 9:44 AM

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஒத்துழைக்கும்... இந்தியா- போலந்து பிரதமர்கள் இணைந்து கூட்டறிக்கை

Aug 23, 2024 9:44 AM

உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து வகையிலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யுத்தக்களத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது இது போருக்கான காலம் அல்ல என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

போலந்து பிரதமர் டோனால்ட் டஸ்க்குடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் இறையாண்மைக்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ராணுவ பலத்தை செலுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது