​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சாவூரில் சாலை விபத்தில் ஆயுதப்படை பெண் காவலர் பலி... மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நபர் கைது

Published : Aug 22, 2024 7:27 PM

தஞ்சாவூரில் சாலை விபத்தில் ஆயுதப்படை பெண் காவலர் பலி... மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நபர் கைது

Aug 22, 2024 7:27 PM

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சாலையில் நடந்து சென்ற ஆயுதப்படை பெண் காவலர் சுபப்பிரியா என்பவர் மீது பின்னால் வந்த டூவீலர் மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தண்டாயுதபாணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுபப்பிரியா, ரெட்டவயல் அருகே உள்ள கோயில் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.