​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் தனியார் கால் சென்டரில் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் சோதனை

Published : Aug 22, 2024 4:24 PM

சென்னையில் தனியார் கால் சென்டரில் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் சோதனை

Aug 22, 2024 4:24 PM

சென்னை ஆயிரம் விளக்கு முருகேசன் நாயக்கர் வணிக வளாகத்தில் உள்ள தனியார் கால் சென்டரில் நடத்தப்பட்ட சோதனையில், சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்ட ஏராளமான சிம் கார்டுகள், சிம் பாக்ஸ்கள் மற்றும் கணினி உபகரணங்களை தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


செல்போன் சிம் கார்டுகளை சிம் பாக்ஸ்களில் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி லாபம் பெறும் நோக்கில் கால் சென்டர் செயல்பட்டதாக வோடாஃபோன் நிறுவனம் அளித்த புகாரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கால் சென்டர் உரிமையாளர் மற்றும் பொறுப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர்.