​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டுக்கல்லில் பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்ககோரி மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்

Published : Aug 22, 2024 3:19 PM

திண்டுக்கல்லில் பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்ககோரி மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்

Aug 22, 2024 3:19 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கருத்து வேறுபாடு பிரிந்து சென்ற மனைவியின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற கணவர், அவரது குடும்பத்தினரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

செம்பட்டியைச் சேர்ந்த தமிழ்பாண்டி- திவ்யபாரதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவி, மகன்களை அழைத்து வர மாமனார் சக்திவேல் வீட்டிற்கு, மதுபோதையில் கணவர் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, இருதரப்பினரிடைய வாக்குவாதம் முற்றி கணவரும், அவரது உறவினர்களும் தாக்கியதில் காயமுற்ற திவ்யபாரதி, சக்திவேல் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.