​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பத்தூர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் மேளம் அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை - 3 பேர் கைது

Published : Aug 22, 2024 2:33 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் மேளம் அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை - 3 பேர் கைது

Aug 22, 2024 2:33 PM

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோயில் திருவிழாவில் மேளம் அடிப்பது தொடர்பாக மதுபோதையில் இருந்த இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சந்துரு என்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்துரு கொலை செய்யப்பட்டவுடன் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், எதிர்தரப்பினர் வசிக்கும் கோனாமேட்டில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியதுடன், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சந்துருவின் உறவினர்கள் நள்ளிரவு 2 மணி வரை சாலைமறியல் போராட்டம் நடத்திய நிலையில், கார்த்திக், ஸ்ரீதர் ஆகியோரையும், தப்பி ஓடிய ஜான் என்பவரை சேலத்திலும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதானவர்களின் வீடுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்துருவின் உறவினர்கள் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.