​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போக்சோ வழக்கில் கைதான சிவராமன் மீது மோசடி வழக்குப் பதிவு..!

Published : Aug 22, 2024 1:32 PM

போக்சோ வழக்கில் கைதான சிவராமன் மீது மோசடி வழக்குப் பதிவு..!

Aug 22, 2024 1:32 PM

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைதாகியுள்ள சிவராமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னை வக்கீல் என கூறி 36 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிவராமன் மீது புகார் அளித்தனர். ஏமாற்றுதல், நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்களை போலியாக தயாரித்தல், பொய்யாக ஆவணத்தை தயாரித்து ஏமாற்றுவது உள்ளிட்ட பிரிவுகளில் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.