​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிராவில் பள்ளி சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து வலுக்கும் போராட்டம்

Published : Aug 21, 2024 7:44 PM

மகாராஷ்டிராவில் பள்ளி சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து வலுக்கும் போராட்டம்

Aug 21, 2024 7:44 PM

சிறுமிகளுக்கு பணியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாருக்கு ஆளான மழலையர் பள்ளியை பொதுமக்கள் சூறையாடியதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் பத்லாப்பூரில் பதற்றம் நீடிக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மறைக்கப்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் வரும் 24ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே நீதி கேட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவாக தண்டிக்கக் கோரி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.