​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொன்னேரி அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல்... 3 பேரிடம் போலீசார் விசாரணை

Published : Aug 21, 2024 7:16 PM

பொன்னேரி அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல்... 3 பேரிடம் போலீசார் விசாரணை

Aug 21, 2024 7:16 PM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கல் வீசி தாக்கி இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பொன்னேரியில் இருந்து கள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது சின்னக்காவனம் பகுதியில் மர்ம நபர்கள் கல் வீசியதில் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கின.

இதனையடுத்து பயணிகளை ஏற்றிச் செல்ல வந்த மாற்றுப்பேருந்தின் மீதும் கல் வீசப்பட்டது. சின்னக்காவனம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருதரப்பினர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.