​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

Published : Aug 21, 2024 2:54 PM

கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

Aug 21, 2024 2:54 PM

கோத்தகிரி அருகே வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஜானகி என்பவர் உயிரிழந்தார்.

தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டுயானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ள நிலையில், செவ்வாய் கிழமை மாலை புதர் பகுதியில் யானை இருப்பது தெரியாமல் வீட்டிலிருந்து ஜானகி வெளியே வந்தபோது தாக்கியதாக கூறப்படுகிறது.