​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷம் வைத்து கொல்லப்பட்ட காட்டுப் பன்றியை உண்ட புலிகள் உயிரிழப்பு?

Published : Aug 21, 2024 12:50 PM

விஷம் வைத்து கொல்லப்பட்ட காட்டுப் பன்றியை உண்ட புலிகள் உயிரிழப்பு?

Aug 21, 2024 12:50 PM

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பிதர்காடு தனியார் தேயிலை தோட்டத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 2 புலிகளின் வயிற்றில் விஷம் கலந்த காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால், விஷம் வைத்து கொல்லப்பட்ட காட்டுபன்றியை வேட்டையாடியதாலேயே 2 புலிகள் இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புலிகள் இறந்துகிடந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றி உடல் கிடந்ததாகவும், அதனை புலிகள் வேட்டையாடி இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.