​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூரில் பெண் கழுத்தை அறுத்து கொலை... கேபிள் வேலை பார்த்த இளைஞர் 12 மணி நேரத்தில் கைது

Published : Aug 20, 2024 7:37 PM

திருவாரூரில் பெண் கழுத்தை அறுத்து கொலை... கேபிள் வேலை பார்த்த இளைஞர் 12 மணி நேரத்தில் கைது

Aug 20, 2024 7:37 PM

திருவாரூர் அருகே பணம், நகைக்காக தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த விவகாரத்தில், குற்றம் நடந்த 12 மணி நேரத்தில், கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்த நாகநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், 40 வயதான அவரது மனைவி பிரபாவதி நேற்று முன் தினம் கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணையில், காலையில் கேபிள் வேலை பார்த்த 20 வயதான இளைஞர் சந்தோஷ் பிரபாவதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, இரவு 9 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடமுயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது தற்காப்புக்காக பிரபாவதி அரிவாளால் தாக்க முயற்சித்த போது, அரிவாளைப் பிடுங்கி பிரபாவதியை சரமாரியாக அவர் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

கொலையான பிரபாவதியின்தாலிச் செயின் மற்றும் செல்போனை திருடிச்சென்ற சந்தோஷ்,  தன்னுடைய சிம்கார்டை பிரபாவதியின் செல்போனில் மாற்றியதை வைத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.