​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கீழ்பவானி வாய்க்காலில் கசிவு - அமைச்சர் முத்துசாமி ஆய்வு

Published : Aug 20, 2024 3:13 PM

கீழ்பவானி வாய்க்காலில் கசிவு - அமைச்சர் முத்துசாமி ஆய்வு

Aug 20, 2024 3:13 PM

ஈரோட்டை அடுத்த நல்லாம்பட்டியில் கீழ்பவானி வாய்க்காலில் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்த  வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சரி செய்யும் பணியில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கசிவு காரணமாக, பவானி சாகர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் வீணாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.