​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - ரயில் மறியல்

Published : Aug 20, 2024 2:54 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - ரயில் மறியல்

Aug 20, 2024 2:54 PM

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பாட்லாபூர் பள்ளியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாட்லாபூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை போலீசார் வீசினர் இருபாலர் படிக்கும் பள்ளியில் மூன்று வயது சிறுமிகள் இருவர், கழிவறைக்குச் சென்றபோது, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆண் தூய்மைப் பணியாளர் அக்ஷய் ஷிண்டே என்பவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி, ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இச்சம்பவத்தில், போக்சோ வழக்கு பதிய மறுத்த இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பள்ளி முதல்வர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.