​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் புயல், கனமழையில் சிக்கி 15 பேர் மாயம் - பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கவைப்பு

Published : Aug 20, 2024 1:30 PM

சீனாவில் புயல், கனமழையில் சிக்கி 15 பேர் மாயம் - பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கவைப்பு

Aug 20, 2024 1:30 PM

சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்சிங் நகரில் கேமி புயல் தாக்கியதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதலே சீனாவில் கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கேமி புயலால் ஜிக்சிங் நகரில் ஆயிரத்து 700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.