​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரு சமூகத்தவர் பிரச்சனையில் இடிக்கப்பட்ட கோயில் - சிலையை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு

Published : Aug 20, 2024 10:57 AM

இரு சமூகத்தவர் பிரச்சனையில் இடிக்கப்பட்ட கோயில் - சிலையை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு

Aug 20, 2024 10:57 AM

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில், அதிலிருந்து கொண்டு செல்லப்பட்ட காளியம்மன் சிலையை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்யவும் திருவிழா நடத்தவும் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி ஒரு தரப்பு ஜே.சி.பி கொண்டு கோயிலை இடித்து விட்டு, சிலையைக் கொண்டு சென்றது.

இது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையிலான அமைதிக்குழு 2வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தி, சிலையை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கவும் கோவில் சாவியை வி.ஏ.ஓவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.