​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சியில் உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

Published : Aug 19, 2024 4:17 PM

கள்ளக்குறிச்சியில் உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

Aug 19, 2024 4:17 PM

உளுந்தூர்ப்பேட்டை அருகே மரத்தின் மேலே ஏறி கிளைகளை வெட்டும்போது இரும்புக் கைப்பிடியால் ஆன அரிவாள் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழந்தார்.

வண்டிப்பாளையம் கிராமத்தில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மரங்கள், உயர் அழுத்த மின்கம்பிகள் மேல் உரசியதால் கிளைகளை வெட்டும் பணியில் சோழமாதேவி மற்றும் அலமேலு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அலமேலுவின் அரிவாள் மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் அவர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.