​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி முகாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது

Published : Aug 19, 2024 3:30 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி முகாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது

Aug 19, 2024 3:30 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த கந்திகுப்பத்தில் உள்ள பள்ளியில் நடந்த என்.சி.சி முகாமில் பங்கேற்ற 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டுவந்த முகாம் பயிற்சியாளரும், முன்னாள் நாம் தமிழர் கட்சி பிரமுகருமான சிவராமனை போலீசார் கோவையில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைதின் போது தப்பித்து ஓடும்போது தவறி விழுந்ததில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பள்ளியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடந்த முகாமில் பங்கேற்ற  13 மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை மறைக்க முயன்றதுடன், பெற்றோரிடம் கூறக் கூடாது என்று மாணவிகளை மிரட்டிய குற்றத்திற்காக அப்பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர், ஆசிரியை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.