​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

Published : Aug 19, 2024 3:05 PM

திருப்பத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

Aug 19, 2024 3:05 PM

நாட்றம்பள்ளி அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் இருந்துவரும் நிலையில், இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளரிடம் கேட்டால், தாம் யூனியன் லீடர் என்று கூறி மிரட்டுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்பார்வையாளர் ராகவன் அண்ணா தொழிற்சங்கத்தின் டாஸ்மாக் பிரிவின் தலைவராக உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மேல் அதிகாரிகள் தயங்குவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.