​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீச்சல் தெரியாமல் அருவியில் குளித்த இளைஞர்.. பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறி பலி..!

Published : Aug 19, 2024 10:59 AM

நீச்சல் தெரியாமல் அருவியில் குளித்த இளைஞர்.. பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறி பலி..!

Aug 19, 2024 10:59 AM

திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி பகுதியில் உள்ள தலையூற்று அருவியில் குளித்த இளைஞர் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் நீச்சல் தெரியாமல் பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறி பலியானதாக கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார்த்திக்குமார் உடல் மீட்கப்பட்டு, உடற் கூராய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 8 மாதக் குழந்தையுடன் அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறினார்.