​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புத்தக திருவிழாவையொட்டி நாய்கள் கண்காட்சி..வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு

Published : Aug 19, 2024 7:45 AM

புத்தக திருவிழாவையொட்டி நாய்கள் கண்காட்சி..வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு

Aug 19, 2024 7:45 AM

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவையொட்டி, நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கால்நடை துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், லாப்ரடார், ராட்வீலர் உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்களுடன் அவற்றின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.