​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயில் திருவிழாவை நடத்துவது யார்? இரு தரப்பினர் மோதலால் திருவிழா நிறுத்தம்

Published : Aug 17, 2024 6:50 PM

கோயில் திருவிழாவை நடத்துவது யார்? இரு தரப்பினர் மோதலால் திருவிழா நிறுத்தம்

Aug 17, 2024 6:50 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவை யார் நடத்துவது என்பதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், சித்திரை மாதம் நடத்த வேண்டிய திருவிழா நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஒன்றிய கவுன்சிலர் தனபதி தரப்பினர் வரும் 21ஆம் தேதி திருவிழாவை நடத்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே  ஊரைச் சேர்ந்த முன்னாள் தலைவர் பாபு தரப்பினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.