​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடரும் கனமழையால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்லத் தடை

Published : Aug 17, 2024 11:35 AM

தொடரும் கனமழையால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்லத் தடை

Aug 17, 2024 11:35 AM

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல, வரும் 20ம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது.

தொடரும் கனமழையால், நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வனத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே, சனி பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோவிலுக்கு செல்ல வந்த பக்தர்கள், வனத்துறை கேட்டின் முன்பு முடி காணிக்கை செலுத்தியும், சூடம் ஏற்றியும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.