​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேனி மாவட்டத்தில் காற்றுவெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 5 குழந்தைகள், 4 பெண்கள் மீட்ட காவல், தீயணைப்புத் துறையினர்

Published : Aug 16, 2024 11:40 AM

தேனி மாவட்டத்தில் காற்றுவெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 5 குழந்தைகள், 4 பெண்கள் மீட்ட காவல், தீயணைப்புத் துறையினர்

Aug 16, 2024 11:40 AM

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்குக் கீழே உள்ள ஆற்றுப்பகுதியில் பெருமாள்புரத்தைச் சேர்ந்த 5 குழந்தைகளும், 4 பெண்களும் குளித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. இதையடுத்து, குளித்துக்கொண்டிருந்த அனைவரும் ஆற்றின் மறுகரையில் தஞ்சம் அடைந்தனர்.

ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த அவர்களை, காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.