​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளரைத் தாக்கி 50 சவரன் கொள்ளை... 3 பேரை தேடும் போலீசார்

Published : Aug 16, 2024 10:55 AM

சென்னையில் நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளரைத் தாக்கி 50 சவரன் கொள்ளை... 3 பேரை தேடும் போலீசார்

Aug 16, 2024 10:55 AM

சென்னை, திருமுல்லைவாயல் அருகே செந்தில் நகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த 3 பேர் கும்பல், கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தராததால் சிறு கத்தியால் தாக்கிவிட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இரவு 9 மணியில் இச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மயங்கிய ரமேஷ் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் நேரில் ஆய்வு செய்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.