​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குருவிகளிடையே தகராறு: போலீஸில் சிக்கிய ரூ.50 லட்சம் மதிப்பு தங்கம்

Published : Aug 16, 2024 8:51 AM

குருவிகளிடையே தகராறு: போலீஸில் சிக்கிய ரூ.50 லட்சம் மதிப்பு தங்கம்

Aug 16, 2024 8:51 AM

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் தொடர்பாக குருவிகளிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கலீல் அலி என்பவர் கடலூரைச் சேர்ந்த கோவிந்தராசுவை தங்கம் கடத்தும் குருவியாக சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

திரும்பி வந்த கோவிந்தராசு, விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனையில் சிக்காததால் தன்னிடமுள்ள தங்கத்தை தானே வைத்துக் கொள்ள திட்டமிட்டு தங்கத்தை வேறொருவர் வாங்கிச் சென்றதாக கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போடவே அங்கிருந்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.