​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களே அரங்கேற்றப்பட்டது - ஷேக் ஹசீனா

Published : Aug 15, 2024 7:17 PM

வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களே அரங்கேற்றப்பட்டது - ஷேக் ஹசீனா

Aug 15, 2024 7:17 PM

வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களே அரங்கேற்றப்பட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

தமது மகன் சஜீப் வாசத்தின் சமூக வலைதளப் பக்கம் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள 3 பக்க அறிக்கையில், மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், கலாச்சார பணியாளர்கள், சாமான்ய மக்கள் எனப் பலரும் வன்முறையில் உயிரிழந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.