​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிறந்து 8 நாளான குழந்தையை தன் நண்பனுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு விற்ற தந்தை.. குழந்தையை பிரிய மனமில்லாமல் போலீசிடம் புகார் கொடுத்த தாய்

Published : Aug 15, 2024 7:12 PM

பிறந்து 8 நாளான குழந்தையை தன் நண்பனுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு விற்ற தந்தை.. குழந்தையை பிரிய மனமில்லாமல் போலீசிடம் புகார் கொடுத்த தாய்

Aug 15, 2024 7:12 PM

சென்னையில் பிறந்து 8 நாட்களான ஆண் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதி, குழந்தையை திரும்ப வாங்கித் தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்தியதாஸ் - சியாமளா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது முறையாக கருத்தரித்த சியாமளாவுக்கு குழந்தை பிறந்ததும் தங்களிடம் தருமாறு சத்தியதாஸின் நண்பர் கணேஷ்-சரண்யா தம்பதியினர் கேட்டதாக கூறப்படுகிறது.

குழந்தை பிறக்கும் முன் 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக் கொண்ட சத்தியதாஸ் தம்பதி, குழந்தை பிறந்ததும் எஞ்சிய பணத்தை வாங்கிக் கொண்டு சிசுவை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.

இந்நிலையில், பிறந்த ஆண் குழந்தையை பிரிய மனமில்லை எனக் கூறி கணேஷ் தம்பதி மீது சியாமளா போலீசார் புகார் அளித்துள்ளார்.