​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலித்து திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி 8 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை

Published : Aug 14, 2024 2:33 PM

காதலித்து திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி 8 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை

Aug 14, 2024 2:33 PM

சென்னை கே.கே நகரில் திருமணமான 8 மாதத்தில் 19 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த திரிஷா, குருமூர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு, கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்துள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே குருமூர்த்தியும் அவரது தாயாரும் சண்டையிட்டு கொண்டே இருந்ததாகவும் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.