​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதை தகராறில் பெரியப்பா மகனை நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற இளைஞர்

Published : Aug 14, 2024 12:48 PM

மதுபோதை தகராறில் பெரியப்பா மகனை நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற இளைஞர்

Aug 14, 2024 12:48 PM

தென்காசி மாவட்டம்  அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஏற்பட்ட தகராறில் பெரியப்பா மகனான பார்த்திபன் என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறி பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் குமார் இருவரும் சரணடைந்த்தாக பாவூர்சத்திரம் காவல் நிலைய போலீசார் கூறினர்.

கொலை குறித்து அறிந்த பாஸ்கரின் தாயார் செல்வி பயத்தில் ஊர் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது  காயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கொலை சம்பவம் குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பாக குமார் மற்றும்  பாஸ்கரிடம் பார்த்திபன் மது போதையில் தகராறு செய்ததாகவும்  அதனால் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.   

வெட்டுப்பட்டு இறந்த பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.