​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேரு, இந்திரா காந்தியை பின்தொடர்ந்து 11-வது ஆண்டாக செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி சாதனை

Published : Aug 13, 2024 6:09 PM

நேரு, இந்திரா காந்தியை பின்தொடர்ந்து 11-வது ஆண்டாக செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி சாதனை

Aug 13, 2024 6:09 PM

பண்டித நேரு, இந்திரா காந்திக்குப் பின் தொடர்ந்து 11-ஆவது ஆண்டாக செங்கோட்டையில் கொடியேற்றும் மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை வரும் 15-ஆம் தேதி மோடி பெறுகிறார்.

நேரு தொடர்ந்து 17 ஆண்டுகளும், இந்திரா காந்தி 16 முறையும் செங்கோட்டையில் கொடியேற்றியுள்ளனர். செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

2047-இல் இந்தியா வல்லரசாகும் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதால், தமது உரையின் போது பிரதமர் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.