​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கையில் போலி பணி நியமன ஆணை வழங்கிய கூட்டுறவு சங்க இணை ஆணைய அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பென்ட்

Published : Aug 13, 2024 5:29 PM

சிவகங்கையில் போலி பணி நியமன ஆணை வழங்கிய கூட்டுறவு சங்க இணை ஆணைய அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பென்ட்

Aug 13, 2024 5:29 PM

ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு போலி பணி நியமன ஆணை வழங்கிய புகாரில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு விற்பனை பண்டகசாலை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு கடந்தாண்டு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கண்காணிப்பாளர் சரவணன் என்பவர் 3 பேருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அலுவலக எழுத்தர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.