​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில்பட்டியில் கஞ்சா புகாரை விசாரித்த பெண் எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Published : Aug 13, 2024 4:24 PM

கோவில்பட்டியில் கஞ்சா புகாரை விசாரித்த பெண் எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Aug 13, 2024 4:24 PM

கோவில்பட்டியில், கஞ்சா போதைப் பொருள் விற்பனைப் புகாரை விசாரிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளரை, கத்தியைக் காட்டி மிரட்டிய, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பல்லாக்கு சாலையில் கஞ்சா போதைப் பொருள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், விசாரணைக்குச் சென்ற கிழக்கு காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் அங்குத்தாயை, இலுப்பையூரணியைச் சேர்ந்த குமார் மற்றும் நாகராஜன் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.