​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு.. கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கொலை..

Published : Aug 12, 2024 9:38 PM

தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு.. கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கொலை..

Aug 12, 2024 9:38 PM

சென்னை ஓட்டேரியில் இளைஞரை கொலை செய்து விட்டதாக கூறி 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் மற்றும் முகமது கலீல் என்பதும் கொலையானவர் சிராஜ் என்பதும் தெரிய வந்தது. செங்கை சிவம் மேம்பாலம் அருகே உடலுறுப்புகள் சிதைக்கப்பட்டு கிடந்த சிராஜின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

தொடர் விசாரணையில், தியேட்டரில் ராயன் படம் பார்க்கும் போது முன்னாள் அமர்ந்திருந்த சிராஜ் மீது பின்னால் அமர்ந்திருந்த இம்ரான், முகமது கலீலின் கால் பட்டதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமாதானம் பேசலாம் என சிராஜை அழைத்து வந்து மது அருந்திய போது இம்ரானின் தாயார் குறித்து சிராஜ் அவதூறாக பேசியதாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.