​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் மரண வழக்கு - போலீசுக்கு மம்தா கெடு

Published : Aug 12, 2024 6:13 PM

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் மரண வழக்கு - போலீசுக்கு மம்தா கெடு

Aug 12, 2024 6:13 PM


கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை இந்த வாரத்திற்குள் போலீஸார் கைது செய்ய தவறினால் வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் இருந்து உடல் முழுவதும் காயங்களுடன் பயிற்சி பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் மருத்துவரின் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.