​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக் கோரி அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் போராட்டம்

Published : Aug 12, 2024 2:15 PM

தென்காசியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக் கோரி அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் போராட்டம்

Aug 12, 2024 2:15 PM

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளியன்று வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்ததில் ஏற்பட்ட நெடியில் 15 மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

இந்த விபத்திற்கு மாணவிகளை காரணமாக்கி தலைமையாசிரியர் தமிழ்வாணி கண்டித்ததால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமென இப்போராட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் லாவண்யா பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவிகள் வகுப்புகளுக்குச் சென்றனர்.