​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே 7 வயது சிறுமியை விவசாய கிணற்றில் தள்ளி கொன்ற தாய் கைது

Published : Aug 12, 2024 1:16 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே 7 வயது சிறுமியை விவசாய கிணற்றில் தள்ளி கொன்ற தாய் கைது

Aug 12, 2024 1:16 PM

கடன்கொடுத்தவர்களுக்கு சொன்ன தேதியில் பணத்தை திருப்பித் தர இயலாது என்பதால், துக்க நிகழ்வு நடந்த வீட்டில் வந்து பணம் கேட்க மாட்டார்கள் என திட்டமிட்டு, பெற்ற மகளை விவசாய கிணற்றில் தள்ளி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பிரகாஷ் - சத்யா தம்பதி தங்களது மூன்றாவது குழந்தையான 7 வயது அதிசயாவை காணவில்லை எனக்கூறி அளித்த புகாரை விசாரித்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், அதிசயா தனது தாய் சத்யாவுடன் செல்வது பதிவான நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.