​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்... நண்பனைப் பழிவாங்க அவரது பெயரில் கடிதம் அனுப்பிய நபர் கைது

Published : Aug 12, 2024 6:52 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்... நண்பனைப் பழிவாங்க அவரது பெயரில் கடிதம் அனுப்பிய நபர் கைது

Aug 12, 2024 6:52 AM

முன்விரோதத்தில் நண்பனைப் பழிவாங்க, அவரது பெயரில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறைக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். 

இளவரசன் என்ற பெயரில் வந்த கடிதம் குறித்து விசாரித்தபோது, தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தது தெரியவந்தது.

இளவரசனுடனான முன்பகையில் அவரைப் பழிவாங்க, கோடீஸ்வரன் மிரட்டல் கடிதத்தை எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.