​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலை விபத்தில் பைக்கில் சென்ற ஊர்க்காவல் படை வீரர் பலி - எஸ்.எஸ்.ஐ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Published : Aug 11, 2024 5:10 PM

சாலை விபத்தில் பைக்கில் சென்ற ஊர்க்காவல் படை வீரர் பலி - எஸ்.எஸ்.ஐ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Aug 11, 2024 5:10 PM

கோவை அவிநாசி சாலையில் கொடிசியா அருகே நேற்றிரவு ஊர்க்காவல் படை வீரர் பிரபு என்பவர் எஸ்.எஸ்.ஐ ரவி என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரவியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் காரை ஓட்டிச் சென்றவரை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பைக்கில் சென்ற இருவரும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.