​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் குட்கா விற்ற 17,481 கடைகளுக்கு சீல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published : Aug 11, 2024 1:47 PM

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் குட்கா விற்ற 17,481 கடைகளுக்கு சீல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Aug 11, 2024 1:47 PM

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமியும் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் குட்கா போன்ற போதை பொருட்களை விற்ற 17 ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறியளவு லாபத்துக்காக, பெரியளவில் கேடு விளைவிக்கக்கூடிய போதை வஸ்துகளை விற்க வேண்டாம் என வணிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.