​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூன்று எல்லைப்பகுதிகளில் ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் படை.. பதிலடி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ரஷ்யா அறிவிப்பு

Published : Aug 11, 2024 7:45 AM

மூன்று எல்லைப்பகுதிகளில் ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் படை.. பதிலடி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ரஷ்யா அறிவிப்பு

Aug 11, 2024 7:45 AM

ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் படையினரை எதிர்கொள்ள ரஷ்ய ராணுவம் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் பெல்கோரோட், பிரயான்ஸ்க், மற்றும் குர்சக் ஆகிய மூன்று எல்லைப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் எல்லைகளில் இருந்து 76 ஆயிரம் பேரை வெளியேற்றிய ரஷ்யா முகாம்களில் தங்கவைத்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் உக்ரைன் படைகளுக்கு எதிராகவும் புதிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்த வந்த 26 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.