​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தையைக் கடத்திச் சென்ற இளம் பெண் கைது.. கணவர் குடும்பத்தினரிடம் கர்ப்பிணி போல் நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

Published : Aug 11, 2024 7:39 AM

குழந்தையைக் கடத்திச் சென்ற இளம் பெண் கைது.. கணவர் குடும்பத்தினரிடம் கர்ப்பிணி போல் நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

Aug 11, 2024 7:39 AM

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் 15 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளிபாளையத்தை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்குப் பிறந்த ஆண் குழந்தையை வெள்ளிக் கிழமை அன்று பட்டப் பகலில் பெண் ஒருவர் கடத்தி சென்றார். இதுபற்றி விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்ற பெண்ணை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த ஆண் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் சேர்க்கப்பட்டது. வினோதினிக்கு கடந்தாண்டு திருமணம் நடந்து கருக்கலைப்பு ஏற்பட்ட நிலையில், கணவன் வீட்டாருக்கு பயந்து கொண்டு கர்ப்பிணி போல நாடகமாடி வந்து உள்ளார். இதன் பின்னர் தனக்குப் குழந்தை பிறந்தது போல நாடகம் ஆட முடிவு செய்து ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த குழந்தையை கடத்தலாம் என கண்காணித்து வெண்ணிலாவிடம் நெருங்கி பழகி உள்ளார் வினோதினி.

வெண்ணிலாவின் ஆண் குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளது என தெரிவித்து குழந்தையை டாக்டரிடம் காண்பித்து வருகிறேன் என கூறி குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், வினோதினியைக் கைது செய்தனர்.