​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூர் கணவருடன் முறைதவறிய உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த மனைவியுடன் 8 பேர் கைது

Published : Aug 10, 2024 2:11 PM

திருவள்ளூர் கணவருடன் முறைதவறிய உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த மனைவியுடன் 8 பேர் கைது

Aug 10, 2024 2:11 PM

திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பார்வதி என்ற பெண், அவரது கணவர் உள்ளிட்ட 8 பேரை திருவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.

புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருடன் திருமண பந்தத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டதாகவும், திருவள்ளூர் மார்க்கெட்டில் தான் நடத்தி வரும் காய்கறி கடையில் ராஜேஸ்வரியை வேலைக்கு அமர்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்களுடன் அங்கு வந்த சுரேஷின் மனைவி பார்வதி, ராஜேஸ்வரியிடம் தகராறு செய்து, தான் எடுத்து வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றிய நிலையில், பக்கத்தில் எரிந்துகொண்டிருந்த விளக்கிலிருந்து தீ பற்றியதாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த தீக்காயம் அடைந்த ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 8 பேரையும் 23 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.